tag:blogger.com,1999:blog-14535229409111548112024-03-13T13:34:29.355-07:00திருவாசகம்நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1453522940911154811.post-32593283423940805342013-05-26T12:42:00.001-07:002013-05-26T12:45:56.548-07:00சிவபுராணம் (1-25)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க!<br />
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க!<br />
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க!<br />
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்ஐவாழ்க!<br />
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! - 5<br />
<br />
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க<br />
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க<br />
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க<br />
கரக்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க<br />
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க. - 10<br />
<br />
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி<br />
தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி<br />
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி<br />
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி<br />
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி<br />
ஆராத இன்பம் அருளுமலை போற்றி! - 16<br />
<br />
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்<br />
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி<br />
சிந்தை மகிழச் சிவபுரா ணம்தன்னை<br />
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்! - 20<br />
<br />
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி<br />
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி<br />
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளக்கொளியாய்<br />
எண்ணிறந்(து) எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்<br />
பொல்லா வினையேன் புகழுமா(று) ஒன்றறியேன் - 25</div>
நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com0