RSS
Facebook
Twitter

Sunday, May 26, 2013

சிவபுராணம் (1-25)

நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்ஐவாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!   - 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரக்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க. - 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி!  - 16

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுரா ணம்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்! - 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளக்கொளியாய்
எண்ணிறந்(து) எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா(று) ஒன்றறியேன் - 25
  • Unordered List

  • More Text